தர்மபுரி பச்சமுத்து நர்சிங் கல்லூரியில் பாத பூஜை

தர்மபுரி: தர்மபுரி பச்சமுத்து நர்சிங் கல்லூரியில், பிஎஸ்சி நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளதையொட்டி, நேற்று முன்தினம் பாத பூஜை நடந்தது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கும், பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெறவும் பாத பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு, பாத பூஜை செய்து வணங்கினர். நிகழ்ச்சிக்கு பச்சமுத்து கல்லூரியின் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். துணை தலைவர் சங்கீத்குமார், இயக்குனர் பிரியா சங்கீத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சிவகாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். …

The post தர்மபுரி பச்சமுத்து நர்சிங் கல்லூரியில் பாத பூஜை appeared first on Dinakaran.

Related Stories: