திண்டுக்கல்லில் மதிமுக கட்சி அமைப்பு தேர்தல்

 

திண்டுக்கல், ஏப். 23: திண்டுக்கல் மதிமுக கட்சி அலுவலகத்தில் 5வது அமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது. கட்சி மாநில தேர்தல் அதிகாரி மகபூப் ஜான் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர், மாவட்ட அவை தலைவர், மாவட்ட பொருளாளர், துணை செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் செல்வராகவன், மாவட்ட அவை தலைவர் சுதர்சன், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி உள்பட 18 பேர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்னர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் மதிமுக கட்சி அமைப்பு தேர்தல் appeared first on Dinakaran.

Related Stories: