இதை பார்த்து சந்தேகமான அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து கோபிநாத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து காரின்மேல் மூடியிருந்த தார்பாயை விலக்கி பார்த்தார். காரின் டிரைவர் இருக்கையில் ஒரு வாலிபர் சீட் பெல்ட் அணிந்த நிலையில் இறந்து கிடப்பதையும், அதன் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்து கிடப்பதையும் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, காருக்குள் பிணமாக கிடந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காருக்குள் இறந்த நிலையில் கிடந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.
முதல் கட்ட விசாரணையில், காருக்குள் இறந்து கிடந்தவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் சிங் (20) என்பதும், இவர், தனது அக்கா மற்றும் மாமாவுடன் சேர்ந்து திருமுடிவாக்கம் சிப்காட்டில் ஒரு தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த சில மாதங்களாக அஜய்குமார் சிங்க்கு மனநிலை பாதிக்கப்பட்டதால், அவரை தனியார் கம்பெனி நிர்வாகம் வேலையை விட்டு நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, நத்தம் பகுதியில் பூட்டிய காருக்குள் அஜய்குமார் சிங் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, மனநிலை பாதிக்கப்பட்ட ஜார்கண்ட் வாலிபரை மர்ம கும்பல் ஏதேனும் அடித்து கொலை செய்து காருக்குள் பிணமாக போட்டுவிட்டு சென்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் குன்றத்தூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, அஜய்குமார் சிங் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
The post குன்றத்தூர் அருகே காரில் பிணமாக கிடந்தவர் வடமாநில வாலிபர்: கொலையா?; போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.
