காவல்துறையில் சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வானகரம், மேடவாக்கம், ஆவடி புதூரில் புதிய காவல்நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ‘ஸ்காட்லாந்து யார்டு’ காவல்துறைக்கு இணையாக தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது. பொள்ளாச்சியில் ரூ.104 கோடியில் காவலர் குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினருக்கு சீருடைப்படி ரூ.4,500ஆக உயர்த்தி வழங்கப்படும். காவல்துறையில் சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும். சென்னையில் 3ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post காவல்துறையில் சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: