மண்ணடி கட்டிட விபத்து உரிமையாளர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு: மாநகராட்சி நோட்டீஸ்

சென்னை: சென்னை பாரிமுனை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில், நேற்று முன்தினம் சூளை பகுதியைச் சேர்ந்த பாரத் சந்தன், தீபக் சந்தன் ஆகியோருக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் பராமரிப்பு பணியின்போது இடிந்து விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி யாரேனும் உயிரிழந்திருக்க கூடுமோ என்ற அச்சத்தில் மீட்புப்பணி தொடங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், 30 பேரிடர் மீட்பு படையினரும் நவீன இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 14 மணி நேரத்தில் இடிபாடுகள் அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. கட்டிட உரிமையாளர்கள் மாநகராட்சியிடம் உரிய அனுமதி இல்லாமல் புதுப்பிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். அதனால் உரிமையாளர்கள் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு உரிமையாளர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் மாநகராட்சி சார்பில் கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கட்டிட உரிமையாளர்களை எஸ்பிளனேடு போலீசார் தேடி வருகிறார்கள்.

The post மண்ணடி கட்டிட விபத்து உரிமையாளர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு: மாநகராட்சி நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: