ஓமலூர், ஏப்.18: ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரம் தோறும் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் 597 கிலோ கொப்பரை பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் தோராயமாக ரூ.40 ஆயிரத்து 155 ரூபாய்க்கு கொப்பரை விற்பனையானது. கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சம் ரூ.40க்கும், அதிகபட்சம் ரூ.78.85 காசுக்கு விற்பனையானதாக கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.
The post ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.
