கோழிக்கொண்டை பூ விளைச்சல் அமோகம்

சேலம், ஏப்.16: வீராணம் சுற்றுவட்டார பகுதிகளில், கோழிக்கொண்டை பூவின் விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, மங்களபுரம், வீராணம், வலசையூர், கன்னங்குறிச்சி, மேச்சேரி, மேட்டூர் உள்பட பல பகுதிகளில் கோழிக்கொண்டை பூச்செடி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது கோழிக்கொண்டை பூ சீசன் என்பதால், அதிகளவில் பூத்து வருகிறது. வீராணத்தில் கோழிக்கொண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ள இடத்தில், கோழிக்கொண்டை பூ நல்ல முறையில் விளைந்துள்ளது. இங்கு பறிக்கப்படும் பூக்களை, விவசாயிகள் சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டுக்கும், வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

The post கோழிக்கொண்டை பூ விளைச்சல் அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: