எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்

ஓசூர், ஏப்.16: திருச்சி கனிமவள பிரிவு மண்டல இணை இயக்குனர் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள், ஓசூர் அடுத்த பத்தலப்பள்ளி பெட்ரோல் பங்க் அருகில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்த லாரியை, சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது, அதில் 3 யூனிட் எம்.சாண்ட் மணல் கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில், அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். அதன் டிரைவர், உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: