காஷ்மீரில் நடைபாலம் இடிந்து 85 பேர் காயம்

உதம்பூர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நடைபாலம் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 85பேர் படுகாயமடைந்தனர். உதம்பூர் மாவட்டம் செனானி தொகுதியின் பைன் கிராமத்தில் நேற்று பைசாகி கொண்டாட்டத்தையொட்டி ஏராளமானோர் குவிந்தனர். அப்போது பாரம் தாங்காமல் நடைபாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 85பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.

The post காஷ்மீரில் நடைபாலம் இடிந்து 85 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: