சிலிண்டர் வெடித்து கார்கள் சேதம்

மதுரை பைபாஸ் சாலை சிங்கேரி நகர் முத்துப்பாண்டி தெரு பகுதியில் பிரபு என்பவர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இங்குகேஸ் வெல்டிங் வைக்கும் சிலிண்டர் நேற்று வெடித்து சிதறியது. இதில் அந்த ஒர்க் ஷாப்பின் தகர செட்டுகள் சுமார் 20 அடி தூரம் பறந்து அங்குள்ள மரத்தில் தொங்கின. தகவல் அறிந்த மதுரை நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அங்கிருந்த 5 கார்கள் முற்றிலும் சேதமடைந்தன. மதுரை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு மதுரை தலைமை அலுவலர் வினோத், உதவி அலுவலர் பாண்டி ஆகியோர் சம்பவ இடத்தில் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

The post சிலிண்டர் வெடித்து கார்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: