நெல்லியாளம் நகரத்தின் பூத் கமிட்டி அமைக்கும் பணி: திமுக மாவட்ட செயலாளர், தொகுதி பார்வையாளர் ஆய்வு

ஊட்டி, ஏப். 12: நெல்லியாளம் நகர பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை திமுக மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பார்வையாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகர திமு கழகத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி குழுவினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். நெல்லியாளம் நகர செயலாளர் சேகர் வரவேற்றார். நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் பேசினார். கூடலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் மற்றும் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா கலந்துக் கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.காசிலிங்கம், மு.திராவிடமணி, கே.ஏ.முஸ்தபா, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, தொரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்ட விவசாய தொழிலாரணி அமைப்பாளர் எம்.பி.ஆலன், எல்பிஎப்., மாடசாமி, நெல்லியாளம் நகர மன்ற தலைவர் சிவகாமி, நெல்லியாளம் நகர நிர்வாகிகள் சிவசுப்ரமணியம், ஷீலா, செல்வகுமார், தென்னரசு, அணிகளின் நிர்வாகிகள் முரளிதரன், மூர்த்தி, பன்னீர்செல்வம், இன்பராஜ் உட்பட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பாக நிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post நெல்லியாளம் நகரத்தின் பூத் கமிட்டி அமைக்கும் பணி: திமுக மாவட்ட செயலாளர், தொகுதி பார்வையாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: