பெரம்பலூர், ஏப்.12: பாளையம் கிராமத்தில் புனித செபஸ்தியார் திருவிழாவை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது. பெரம்பலூர் அருகே குரு ம்பலூர் பேரூராட்சிக்கு உட் பட்ட பாளையம் கிராமத் தின் மேட்டுத் தெருவில் உள்ள புனித செபஸ்தியார் கோவில், ஆண்டுத் திரு விழா நேற்று கொண்டாடப் பட்டது. இதனையொட்டி நேற்று(11ம்தேதி) செவ்வா ய்க்கிழமை காலையில் ஆர்.சி தொடக்கப்பள்ளி அருகேயுள்ள புனித செபஸ் தியார் கோவில் முன்பு, புனித சூசையப்பர் தேவா லய பங்கு குரு ஜெயராஜ் தலைமையில் பாடல் திருப் பலி நடைபெற்றது. திருப் பலியின் முடிவில் பக்தர்க ளுக்கு மந்திரித்த கஞ்சியு டன் அன்னதானம் வழங்க ப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை நடைபெற்ற சப்பர பவனியை புனித சூசையப்பர் தேவலய பங் கு குரு ஜெயராஜ் மந்திரி த்து புனிதப்படுத்தி தொட ங்கி வைத்தார். இதில் பா ளையம், ரெங்கநாத புரம், குரும்பலூர், சத்திரமனை, புது நடுவலூரைச் சேர்ந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர் கள் நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டனர். சப்பர பவனியின்போது அன்பியம் குழுவினர் ஜெபத்துடன் பாடல்களை பாடியபடி வந்தனர்.
The post பாளையம் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய சப்பர பவனி appeared first on Dinakaran.