முன் விரோதத்தில் மோதல் தைரியம் இருந்தால் வா என அழைத்த ரவுடி குத்திக்கொலை: மற்றொரு ரவுடி கைது

நாகர்கோவில்: தைரியம் இருந்தால் நேரில் வா என அழைத்த ரவுடி, சரமாரி குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மற்றொரு ரவுடி கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் கோட்டார் பட்டகசாலியன்விளையை சேர்ந்தவர் ரஞ்சித் (29). போலீஸ் ரவுடி பட்டியலில் இருந்தார். இவருக்கும், பீச்ரோடு பெரியவிளையை சேர்ந்த சிவசங்கருக்கும் (38) முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த ஆண்டு சிவசங்கர் நண்பர்களுடன் ரஞ்சித் வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் சிவசங்கர் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, ரஞ்சித் நண்பர்கள் விக்னேஷ் (29), அஜித் (22) ஆகியோருடன் பைக்கில் வந்தபோது பெரியவிளை அருகே சிவசங்கர் வழி மறித்து சரமாரியாக கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற விக்னேசுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் ரஞ்சித் இறந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிந்து சிவசங்கரை நேற்று கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் ஏற்கனவே இருந்த முன் விரோதத்தில் என்னை தீர்த்து கட்டி விடுவதாக ரஞ்சித் மிரட்டி வந்தார். இரவில் போன் செய்து, தைரியம் இருந்தால் பெரியவிளைக்கு வா என அழைத்தார். அதன்படி சென்று கத்தியால் குத்தினேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

The post முன் விரோதத்தில் மோதல் தைரியம் இருந்தால் வா என அழைத்த ரவுடி குத்திக்கொலை: மற்றொரு ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: