முதுமலை காப்பக வனத்தில் ஆண் யானை பலி

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக் கோட்டம் தெங்குமரஹாடா பிரிவுக்குட்பட்ட மங்களபட்டி காவல் பகுதியில் ஆற்றோரத்தில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை ரோந்து சென்ற வனப்பணியாளர்கள் பார்த்துள்ளனர்.

சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து புலிகள் காப்பக கள இயக்குனரின் ஆலோசனைப்படி இறந்த யானைக்கு நேற்று உடற் கூராய்வு செய்யப்பட்டு முக்கிய உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டன. யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அப்பகுதியில் விடப்பட்டது. ரசாயன பரிசோதனைக்கு பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post முதுமலை காப்பக வனத்தில் ஆண் யானை பலி appeared first on Dinakaran.

Related Stories: