கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் குட்டிகளுடன் காட்டுயானைகள் முகாம்: பேரிஜம் செல்ல மீண்டும் தடை

கொடைக்கானல் : கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் குட்டிகளுடன் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர் பகுதியை ஒட்டி உள்ள கீழ் குண்டாறு வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுயானை கூட்டம் குட்டிகளுடன் முகாமிட்டிருந்தது. அதனை வனத்துறையினர் போராடி விரட்ட முயன்றனர். இந்நிலையில் சில தினங்கள் அங்கு முகாமிட்டிருந்த காட்டுயானைகள் மெல்ல இடம் மாறி பேரிஜம் வனப்பகுதிக்குள் முகாமிட்டு உள்ளது.

குட்டிகளுடன் யானைக்கூட்டம் இருப்பதால் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பேரிஜம் ஏரி பகுதியில் யானைக்கூட்டங்களை பார்த்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். காட்டுயானைகள் கூட்டம் முகாமிட்டு இருப்பதால், பாதுகாப்புக் கருதி இந்த பகுதியை தற்காலிகமாக மூட வனத்துறை உத்தரவிட்டுள்ளனர்.

The post கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் குட்டிகளுடன் காட்டுயானைகள் முகாம்: பேரிஜம் செல்ல மீண்டும் தடை appeared first on Dinakaran.

Related Stories: