பாம்பை கடித்து துண்டாக்கி கொன்ற மூன்று பேர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சின்னகையனூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (33). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சூர்யா (21)‌. சந்தோஷ் (21). மூவரும் நண்பர்கள். இந்த நிலையில் கடந்த ஜனவரி 10ம் தேதி சின்னகையனூர் ஏரி அருகில் மது அருந்திக் கொண்டிருந்த மோகனை தண்ணீர் பாம்பு ஒன்று கடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மோகன் தன்னைக் கடித்த தண்ணீர் பாம்பை கையில் எடுத்து, ‘என்னையே கடித்து விட்டாயா, உன்னை என்ன செய்கிறேன் பார்’ எனக்கூறியபடி அதை துண்டு துண்டாக கடித்து துப்பியுள்ளார். இதில் தண்ணீர் பாம்பு இறந்தது.

இந்த காட்சிகளை அருகில் இருந்த நண்பர்கள் இருவரும் வீடியோ எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ராணிப்பேட்டை வனத்துறையினர் விசாரணை நடத்தி, சின்னகையனூரில் பதுங்கியிருந்த மோகன், சூர்யா, சந்தோஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் மூவரையும் அரக்கோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பாம்பை கடித்து துண்டாக்கி கொன்ற மூன்று பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: