ஈரோடு, மார்ச் 27: ஈரோடு மாவட்டம், பெருந்துறை, தாளவாடி, பங்களாபுதூர் போலீசார் அவர்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருந்துறை, ராம் நகர் பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த கும்பலை மடக்கிப் பிடித்து, வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த சீட்டுக் கட்டு, பந்தயப் பணம் ரூ. 12,470 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதேபோல, தாளவாடி, சிமிட்டஹள்ளி பகுதியில் உள்ள ரங்கசாமி கோயில் அருகில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கொண்ட கும்பலை தாளவாடி போலீசார் மடக்கிப் பிடித்தனர்.