பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது

ஈரோடு, மார்ச் 27:  ஈரோடு மாவட்டம், பெருந்துறை, தாளவாடி, பங்களாபுதூர் போலீசார் அவர்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருந்துறை, ராம் நகர் பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த கும்பலை மடக்கிப் பிடித்து, வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த சீட்டுக் கட்டு, பந்தயப் பணம் ரூ. 12,470 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதேபோல, தாளவாடி, சிமிட்டஹள்ளி பகுதியில் உள்ள ரங்கசாமி கோயில் அருகில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கொண்ட கும்பலை தாளவாடி போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

அதைத்தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து  கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, சீட்டு கட்டுகள், பந்தயப் பணம் ரூ. 7,250 மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதேபோல, பங்களாபுதூரை அடுத்துள்ள வரப்பள்ளம், சேத்துக்காட்டு புதூர், தண்ணீர் டேங்கின் பின்புறம் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 பேர் கொண்ட கும்பலை பங்களாபுதூர் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், பணம் ரூ.530 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்,

Related Stories: