கார் மோதி இன்ஜினியர் பலி

ஈரோடு: திருப்பூர் கணக்கம்பாளையம், சின்னத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ரமேஷ் (33). இவருக்கும், ஈரோடு சின்னசேமூர் பகுதியை சேர்ந்த யுவராணி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ரமேஷ் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.  இந்நிலையில், ஈரோட்டில் உள்ள மனைவியை பார்ப்பதற்காக திருப்பூரில் இருந்து நேற்றுமுன்தினம் காலை தனது ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.  பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வந்த போது பின்னால் வந்த கார், ரமேஷ் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்,  ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: