பிரபல திரையரங்கில் அதிகாரிகள் சோதனை

அண்ணாநகர், மார்ச் 23: சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள பிரபல திரையரங்கில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த திரையரங்கம் சார்பில் வாங்கப்பட்ட பொருட்களுக்கு உரிய வரி செலுத்தாமல், முறைகேடாக வாங்கியதாக சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் குறித்தும், பொருட்கள் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கம் மட்டுமின்றி சென்னையில் மேலும் சில இடத்திலும் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: