சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், பங்குனி பெருவிழாவின் மார்ச் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பங்குனி மாதம், கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் மிக விமர்சையாக நடைபெறும். 4 மாட வீதியில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்ச கணக்கான மக்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவது வழக்கம். கொரானா காரணமாக கடந்த ஆண்டுகளில் பல்வேறு கட்டுப்படுகள் விதிக்கப்படன. இந்த வருடம் எந்தவித கட்டுப்படுகளும் இன்றி பொதுமக்கள் தரிசனம் பெறலாம்.