திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்கு மலையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம்’ நிகழ்ச்சி நடந்தது. தமிழக அரசின் அறிவிப்பின்படி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கற்றல் இடைவெளிக்கு தீர்வு காணும் வகையில், 1ம் வகுப்பு முதல், 3ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. குழந்தைகளிடமும், ஆசிரியர்களிடமும் ஏற்பட்டுள்ள தாக்கத்தை, மக்களிடமும் முக்கியமாக பெற்றோர்களிடமும் கொண்டு சென்ற, ‘எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்’ என்னும் திட்டத்தின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியானது பள்ளி வளாகத்தில் நடந்தது.