கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையில் நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி பேசுகையில். ஆட்டோ டிரைவர்கள் தங்கள் ஓட்டும் ஆட்டோவில் தங்களின் முழு விவரங்களான பெயர், முகவரி, மொபைல் நம்பர், ஆட்டோ லைசன்ஸ் நம்பர் போன்றவை ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு எளிதில் தெரியும்படி மாட்டி வைத்திருத்தல் வேண்டும்.