மொடக்குறிச்சி: எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு 1232 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல்தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.82க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.79.59க்கும், சராசரி விலையாக ரூ.80.30க்கும், இரண்டாம் தரம் அதிகபட்ச விலையாக ரூ.78.09க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.58.50க்கும், சராசரி விலையாக ரூ.73.10 காசுக்கு ஏலம் போனது. மொத்தமாக 57,415 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ.43 லட்சத்து 97 ஆயிரத்து 138 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.