திருவெறும்பூர் அருகே பெண் மர்ம சாவு

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே ஹோட்டல் மற்றும் டீக்கடைகளில் வேலை பார்த்து வரும் பெண் வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள ராவுத்தான் மேடு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து பானு (50) என்பவர் தங்கி உள்ளார். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் டீக்கடைகளில் பாத்திரம் கழுவி பிழைப்பு நடத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அவருக்கு சாப்பாடு கொடுக்கலாம் என போய் பார்த்தபொழுது பானு இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார் பானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் பானுவின் சொந்த ஊர் எது அவரது உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா? என்பது குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: