திருத்தணி: திருத்தணியில் பலத்த சூறாவளி காற்றுடன் நேற்று மழை பெய்தது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. அவற்றை சீர்செய்வதற்கு மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனாலும் அவற்றை அப்புறப்படுத்துவதற்கு மின்வாரிய ஊழியர்கள் திணறி வருகின்றனர். திருத்தணி மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்டது திருத்தணி வடக்கு மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட முருகம்பட்டு, பொன் பாடி, மத்தூர், சிங்கராஜபுரம், கொத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது, இந்த மின்சாரத்தை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் விவசாயத்திற்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் வேரோடு மின்கம்பங்கள் மீது சாய்ந்து விட்டது.