ஈரோடு, மார்ச்20: ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில் திருவிழாவுக்காக பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில் குண்டம் தேர்த்திருவிழா வரும் நாளை (21ம் தேதி) பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. வருகின்ற 25ம் தேதி கம்பம் நடுதலும், 30ம் தேதி கொடியேற்றமும் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 4ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், 5ம் தேதி பொங்கல் விழா மற்றும் தேரோட்டமும் நடைபெற உள்ளது. 8ம் தேதி கம்பம் எடுத்தலும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்க உள்ளது.