தாம்பரம்: குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணைக்கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிக்னல் அருகே பிரபல துணிக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில், இந்த துணிக்கடையின் மேல் தளத்தில் இருந்து நேற்று காலை கரும் புகை வந்துள்ளது.