ஈரோடு, மார்ச் 19: சென்னிமலை அருகே கே.ஜி.வலசு பகுதியை சேர்ந்தவர் சிவராம் (27). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணம் ஆகவில்லை. சிவராமின் தாயார் லதா கடந்த 3ம் தேதி திருப்பூர் அருகே தனது மகள் அஸ்வதி வீட்டுக்கு சென்றிருந்தார். அவரை கே.ஜி.வலசில் உள்ள தனது வீட்டுக்கு சிவராம் அழைத்த போது உடல்நிலை சரியான பிறகு அனுப்பி வைப்பதாக சிவராமின் சகோதரி அஸ்வதி தெரிவித்துள்ளார்.