சாலை விபத்தில் ஆசிரியை பலி

மாதவரம், மார்ச் 19: திருவல்லிக்கேணி பெல்ஸ்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரபிசா தில்தார் (30). இவர் ராஜமங்கலம் பகுதியில் உள்ள ஒரு டியூஷன் சென்டரில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு ராஜமங்கலம் 200 அடி சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: