திருவள்ளூர், மார்ச் 16: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் நோக்குடன், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 18ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் பட்டாபிராம், தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெஷின் ஆபரேட்டர், வெல்டர், பிட்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரிசியன், புரொடக்சன் ஆபரேடர், சேல்ஸ் மேனேஜர், டிரைவர், எச்.ஆர் எக்சிகியூட்டிவ், டெவலப்மெண்ட் மேனேஜர் போன்ற பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும்.