ஐ.டி.காரிடர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை காலை நடைபெறுகிறது

சென்னை: மின்வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தரமணி, ஐ.டி காரிடர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், நாளை (16ம் தேதி) காலை 10.30 மணிக்கு தரமணி, சி.எஸ்.ஐ.ஆர்.ரோட்டில் உள்ள டைடல் பார்க் துணை மின்நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: