வியாபாரியை கடத்தி கொன்று வீசியது நண்பர்

ஓசூர், மார்ச் 15: ஓசூரில் வியாபாரியை கடத்தி கொலை செய்த வழக்கில், அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். போலீசில் அவர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சானமாவு வனப்பகுதி அருகே, கோபசந்திரத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தவர் சிலம்பரசன் (27). ஓசூர் திகிலர்பேட்டையை சேர்ந்தவர் என்பது ெதரியவந்தது.

காய்கறி, பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிலம்பரசனை, அவரது நண்பர் குமார் கடத்திச் சென்று கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் குமாரை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குமார் போலீசாரிடம், போனில் எனது மனைவியிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். நான் பலமுறை எச்சரித்தும் அவர் போன் செய்வதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை சானமாவு வனப்பகுதிக்கு அழைத்து வந்து இரும்பு ராடால் அடித்து கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: