முசிறி: முசிறி அருகே மூதாட்டி கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே சொரியம்பட்டி குடித்தெருவை சேர்ந்த மூதாட்டி செல்லம்மாள் (68) என்பவரை கடந்த 2012 ம் ஆண்டு கொலை செய்து ஒன்னரை பவுன் நகையை கொள்ளை அடித்துச் சென்றதாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் 2019 ம் ஆண்டு முதல் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.