திருவெறும்பூர்: திருச்சி அருகே மூதாட்டியையும் அவரது மகனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவன் மனைவி உட்பட 3 பேர் மீது மணிகண்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். திருச்சி அருகே ஓலையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(71). இவர் அந்த ஊரில் உள்ள பொது தண்ணீர் குழாயில் துணி துவைத்து குளித்துக் கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், அவரது மனைவி சர்மிளா ஆகிய இருவரும் வந்து கோவிந்தம்மாளிடம் பொது குடிநீர் குழாயில் எப்படி குளிக்கலாம் என தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர்.