கிருஷ்ணகிரி, மார்ச் 14: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை 20,875 மாணவ, மாணவிகள் எழுதினர். காப்பி அடிப்பதை தடுக்க 145 பறக்கும்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வில், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் உள்ள 118 அரசு, தனியார் பள்ளிகள், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 68 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 23,948 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத இருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 87 தேர்வு மையங்களில் நேற்று நடந்த தேர்வில், 20,875 பேர் தேர்வெழுதினர். 3,073 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை. மேலும், மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் உதவியுடம் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.