இடைப்பாடி, மார்ச் 13:மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்கு மட்டும் 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் குறைந்ததால் செக்கனூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை ஆகிய நீர்மின் கதவணைகள் வழியாக குறைந்தளவு தண்ணீரே செல்கிறது. தற்போது, நீர்மின் கதவணையில் மின்சார உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.