ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் ரூ.5.50 கோடி மதிப்பிலான 98 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றம்) மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நேற்று நடைபெற்றது. இதில் ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த லோக் அதாலத்தினை மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.