காய்ச்சல், மூச்சுத்திணறலால் வாலிபர் பலி கொரோனாவா? மருத்துவத்துறை ஆய்வு

திருச்சி: திருச்சியை சேர்ந்த 27 வயது வாலிபர் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் சில ஆண்டுகளாக பெங்களூர் சென்று அங்கு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊரான திருச்சிக்கு விடுமுறைக்காக வந்துள்ளார். வந்த இடத்தில் அவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார். வாலிபர் மரணத்துக்கு கொரோனா காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா என மருத்துவர்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: