பெரியபாளயைம்: சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் உள்ள அய்யனார் மேடு ஏரிக்கரை அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஆரணி காவல் நிலைய போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் நேற்று அய்யனார் மேடு ஏரிக்கரை அருகே ரோந்து சென்ற போது, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் 750 ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் அய்யனார் மேடு பகுதியைச் சேர்ந்த மேகநாதன் (50), தேவராஜ் (42), பாளையம் (60) என தெரிய வந்தது. 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.