திருச்சி, மார்ச் 11: திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு கதை சொல்லி நிகழ்ச்சியும், சதுரங்க பயிற்சி வகுப்புகளும் கட்டணமின்றி நடத்தப்பட உள்ளது. திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு கதை சொல்லி நிகழ்ச்சியும், சதுரங்க பயிற்சி வகுப்புகளும் கட்டணமின்றி நடத்தப்பட்டு வந்தது. கொரோனாதொற்று காரணமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்பொழுது நூலகத்தில் கதை சொல்லி நிகழ்ச்சியும், சதுரங்கப் பயிற்சியும் மீண்டும் நாளை (12ம் தேதி) மைய நூலகத்தில் துவங்கப்பட உள்ளது.