ரசு விடுதிகளை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல் உள்ளாட்சி அமைப்புகள் இரூர் பகுதி விவசாயிகளுக்குகாளான் வளர்ப்பு செயல்விளக்கம்

பாடாலூர்: பாடாலூர் அருகே, ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தில் தனியார் வேளாண்மை கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள், விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தில் காளான் வளர்ப்பு மற்றும் அதன் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் எடுத்து கூறினார். அப்போது மாணவர்கள் தெரிவித்தது: காளான் மனிதனுக்கு உணவாக மட்டுமல்லாமல் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. அதிக அளவு புரதச்சத்தும் மிக குறைந்த அளவு கொழுப்பு சத்தும் உள்ளது. மேலும் சர்க்கரை சத்து, அமினோ அமிலங்கள், மற்றும் தாது உப்புகள், நார்ச்சத்து, சாம்பல் சத்து, வைட்டமின்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய உணவுக் காளான்.

ரத்தத்தில் உள்ள கொழுப்பை 24 சதவீதம் அளவுக்கு குறைப்பதோடு, நார்ச்சத்து காளானில் அதிகமாக இருப்பதால் வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும். காளானில் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துப் பொருட்களும் அடங்கியுள்ளன. குறைந்த செலவில் தேவையான அளவு புரதச்சத்தினை பெற காளான் உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். காளான் நீரிழிவு, இதய கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வராமல் தடுக்கவும், குணமாக்கவும் காளான்களை உணவில் சேர்க்கலாம் என தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இரூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: