வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. சதுரங்கப் போட்டியை வேதாரண்யம் நகர மன்ற தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார். இந்த சதுரங்க போட்டியில் 510 பேர் கலந்து கொண்டனர். சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.