ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா

கிருஷ்ணகிரி, மார்ச் 5: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓசூர்  சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா, வருகிற 7ம் தேதி நடைபெறுகிறது. விழாவினையொட்டி ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனை ஈடுகட்டும் வகையில், வருகிற 18ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளன்று, ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: