கிருஷ்ணகிரி, மார்ச் 5: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா, வருகிற 7ம் தேதி நடைபெறுகிறது. விழாவினையொட்டி ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.