திருப்புத்தூர், மார்ச் 5:திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவத் திருவிழா கடந்த பிப்.26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 2ம் நாள் முதல் 6ம் நாள் வரை தினந்தோறும் காலையில் சுவாமி திருவீதி புறப்பாடும், இரவு சிம்மம், ஹனுமன், கருடசேவை, சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. 7ம் திருநாளான நேற்று மாலை தெப்பக்குள மண்டபம் முன்பு முகூர்த்தககால் நடும் நிகழ்வு நடந்தது. 8ம் திருநாளான இன்று காலை சுவாமி திருவீதி புறப்பாடும், இரவு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.