ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை எட்டுப்பட்டி கிராம மக்கள் நலம்பெறும் பொருட்டு கிராம சாந்தி பூஜை நடைபெற்றது. இதையடுத்து, புதன்கிழமை காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் மாதேஸ்வரன் கோயிலில் இருந்து தீர்த்த குட ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக வந்து கோயிலை அடைந்தது. இதனையடுத்து விநாயகர் பூஜை, வருண பூஜை, வாஸ்து பூஜை, கும்ப அலங்காரத்துடன் முதல்கால யாகபூஜை நடைபெற்றது.