குன்னம், மார்ச் 2: வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சி மொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சி மொழித் திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது. முன்னதாக தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சித்ரா அனைவரையும் வரவேற்றார். தூயத் தமிழ் பற்றாளர் விருது பெற்ற ரவிக்குமார் ஆட்சி மொழித் திட்ட விளக்கம் குறித்து பேசும்போது, தமிழ் ஆட்சி மொழியாக தோன்றியதிலிருந்து தற்போது வரை தமிழின் வளர்ச்சி பற்றி எடுத்துரைத்தார்.