மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ,மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில்வேதியியல் துறையின் பேரவை துவக்க விழாவானது கல்லூரியின் முதல்வர் ஸ்ரீகானப்பிரியா தலைமையில் நடைபெற்றது.வேதியியல் துறை தலைவர் முனைவர்.சாந்தி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக லதா பரமேஸ்வரன் கலந்து கொண்டு ” வாழ்க்கை என்ற அனுபவம் ” என்ற தலைப்பில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். மேலும்,விழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவ,மாணவிகளின் அறிவியல் கண்காட்சியும் நடைபெற்றது.