கோபி,பிப்.27: கோபி அருகே உள்ள நம்பியூர் பேரூராட்சி 8வது வார்டில் குப்பையை தரம் பிரித்து வழங்கிய பொதுமக்களுக்கு, பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். கோபி அருகே உள்ள நம்பியூர் பேரூராட்சியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.பேரூராட்சி அறிவிப்பை தொடர்ந்து, 8வது வார்டு பகுதியில் வசித்து வரும் 3 பெண்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்கி வருகின்றனர்.