திருச்சி:திருச்சி அரசு அண்ணல் காந்தி மருத்துவமனையில் வி லவ் யு அறக்கட்டளை சார்பில் நேற்று கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சென்னையிலும், ரத்ததானம் செய்வதன் அவசியத்தை வௌிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் ரத்த விநியோகத்தில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை உள்ளது. ஆனால் ஒரு நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 1% அதன் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரத்த தானம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. இருப்பினும், இந்தியாவில், தகுதியான மக்கள் தொகையில் 1%-க்கும் குறைவானவர்களே இரத்த தானம் செய்கிறார்கள்.