தேனி: கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலமானது சாம்பல் புதன் கிழமையுடன் இன்று முதல் துவங்குகிறது. கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் இன்று முதல் துவங்குகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்புத்திருப்பலியும், ஆராதனையும் நடைபெறுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு 3ம் நாள் உயிர்தெழுந்ததாக கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. இயேசு உயிர்தெழுந்த தினத்தை உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஈஸ்டர் பெருவிழாவிற்கு முந்தைய 40 நாட்களை கிறிஸ்துவர்கள் தவக்காலமாக அனுசரிக்கின்றனர். முதல் நாள் சாம்பல் புதன் கிழமையாக அனுசரிக்கப்படுகிறது. தவக்கால நாட்களில் கிறிஸ்துவர்கள் பெரும்பாலும் மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள். மேலும் வீடுகளில் ஆடம்பர நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும், திருமண நிகழ்வுகளையும் தவிர்த்து விடுவார்கள்.